Monday, April 17, 2017

Life is beautiful.




Once a dog ran into a museum where all the walls, the ceilng, the door and even the floor were made of mirror.
Seeing this the dog froze in surprise in the middle of the hall, a whole pack of dogs surrounded it from all sides, from above and below.
Just in case, the dog bared his teeth, all the reflections responded to it in the same way.
Frightened, the dog frantically barked. The reflections imitated the bark and increased it many times. The dog barked even harder and the echo was keeping up. The dog tossed from one side to another, biting the air - his reflections also tossed around snapping their teeth.
Next day in the morning, the museum security guards found the miserable dog, lifeless and surrounded by a million reflections of lifeless dogs.
There was nobody, who would make any harm to the dog.
The dog died by fighting with his own reflections.
The world doesn't bring good or evil on its own.
Everything that is happening around us is the reflection of our own thoughts, feelings, wishes and actions.
The World is a big mirror.
Strike a good pose!
Smile from deep within.
Life is beautiful.

Which birth date numbers is your's

Birth dates: 3, 9, 12, 15, 21, 29, 30
People born under these dates are very creative at heart. They are nothing without art and culture. They have a very sharp and imaginative mind.
----------------------------------------------
Birth dates: 8, 17, 22, 26, 13, 24, 31
These people give a lot of importance to the family. They love their family like anything and can do anything for them. They are honest friends too. They are always around to help their friends whenever they need them.
----------------------------------------------
Birth dates: 4, 25, 16, 5, 14, 23
People who have these birth dates are always the ones looking for some experience. They like to be a part of different things to gain experience in every field. Also, they love adventure and are fun to be around
----------------------------------------------
Birth dates: 1, 10, 18, 19, 27, 28
They are born leaders. People born on these dates are very strong. When they set a goal for themselves, they make sure that they achieve it in life.
----------------------------------------------
Birth dates: 2, 6, 7, 11, 20

You are one of the smartest people. You get to know it first when something is about to go wrong. Also, people born under these dates know to cope up with problems easily.

Monday, February 27, 2017

Survival of the Fittest

வட அமெரிக்காவில் ஒரு பறவை இனம் அழிந்து வந்தது.

அதை பாதுகாக்க அந்த நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது.

அதற்காக உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அந்த பறவைக்கு தனி பாதுகாவலர், தனி உணவு அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது.

கோடை காலத்தை சமாளிக்க தனியாக குளிர் அறையும் அமைக்கப்பட்டது.

பறவை இனம் பெருகியது.

பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக விடப்பட்டது.

அதற்கு தன் எதிரிகள் யார் என்று தெரியவில்லை.

எதிரிகளுக்கு உணவானது.

மின் கம்பங்களில் எப்படி அமர்வது என்று தெரியவில்லை.

பறவைகள் அழிய தொடங்கின (எதிரிகளுக்கு உணவாகி, மின் கம்பங்களில் கருகி, வண்டிகளில் மோதியும்).

எந்த இனம் அழிய கூடாது என்று எடுக்கப்பட்ட முயற்சி, அந்த இனம் அழிய காரணம் ஆனது.

அதே போல் தான் நம் பிள்ளைகளும், நமக்கு கிடைக்கவில்லை
என்று எண்ணி நம் பிள்ளைகளுக்கு கொடுத்து அழகு பார்க்கிறோம், அழிவுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.

பூங்காவில் இருக்கும் விலங்குக்கு வேட்டையாட தெரியாது.

அதே போல் தான் அதிகம் செல்லம் கொடுக்கும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்க முடியாது.

பிள்ளைகளை வெளி உலகத்தை தானாக உணர வழி விடுங்கள்.

நல்லது கெட்டதை தானாக கற்றுக் கொள்ளட்டும்.

நம் பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டோம், அவன்/அவள் வெளி உலகத்தை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்ற ஐயம் உங்களுக்கு வேண்டாம்.

நீங்கள் கற்று கொடுக்க மறந்த இந்த பாடத்தை இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்கும்.

இதை தான் ஆங்கிலேயத்தில் survivaloffittest என்று சொல்லுகிறோம்.

அதை நோக்கித்தான் எல்லா மானிட பிறவிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன.

Thursday, February 16, 2017

ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா???




ஐந்து நிமிடங்களில் பத்து வினாக்களுக்கு பதில் எழுத முடியுமா??? 

ஒரு நிறுவனம் ...

வேலைக்கு ஆட்கள் தேவை  என்று அறிவித்தது...

அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு  வந்திருந்தார்கள்...

அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார  வைத்தார்கள்...

அனைவரிடமும் வினாத்தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது...

இப்பொழுது அந்த  நிறுவன மேலாளர்  பேசினார்..

இந்த வினாத்தாளில் பத்து  கேள்விகள் உள்ளது.

உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்...

அதற்க்குள் இந்த  வினாக்களுக்கு நீங்கள்  பதிலளிக்க வேண்டும்.

தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்  என்றார்.

ஐந்து நிமிட நேரம்  ஆரம்பமானது..

நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். 

நேரம் முடிந்த பின்...

அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர்..

விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும்  நேரம்  குறைவாக  கொடுத்து விட்டீர்கள்...

எங்களால் ஐந்து  கேள்விகளுக்கும், ஏழு  கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை என்றனர்.

அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.

அதன்பின்,  அந்த நிறுவன மேலாளர் சொன்னார்.

விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள்  இருவர்  மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய   தகுதியானவர்கள்.

மற்றவர்கள் வீட்டிற்கு  செல்லலாம் என்றார்.

அனைவருக்கும் ஒரே  ஆச்சரியம்,

அனைவரும் ஒரு சேர அந்த  நிறுவன மேலாளரிடம்  கேட்டனர்.

வினாக்களுக்கு சரியான  பதிலளித்த எங்களுக்கு  வேலை இல்லை  என்கிறீர்கள்.

எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த  இருவருக்கு மட்டும் எப்படி  வேலை கொடுத்தீர்கள் என்றனர்.

(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில்  அளிக்காதவர்களுக்கு வேலையா?)

அதற்கு அந்த மேலாளர்  சொன்னார்,

எல்லோரும்  அந்த  பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள் என்றார்..

படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு  சென்றனர்.

அந்த பத்தாவது கேள்வி இது தான்..!

10)  மேற்கண்ட எந்த  வினாக்களுக்கும் நீங்கள்  பதில் அளிக்க வேண்டாம்.? என்பதாகும்.

இது சிரிக்க வேண்டிய  விஷயம் அல்ல. நாம் அனைவரும் சிந்திக்க  வேண்டிய விஷயம்,

இரண்டு நிமிடம் நேரம்  ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும்  படித்திருந்தால் வேலை  நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா? 

Yes...!

இந்த நவீன யுகத்தில்   பிள்ளைகளை படி படி என்று படிக்கச் சொல்லி  நிறைய மதிப்பெண்கள்  வாங்க வேண்டும் என்று  நினைக்கிறோமே தவிர,

நம் பிள்ளைகள் நல்ல  புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை..!

பலநிலைகளில்இப்படித்தான் ஏமாறுகிறோம் பொறுமையாளர்கள்  கூட புறக்கணிக்கப்படுகிறார்கள்.!!

Wednesday, February 8, 2017

சிந்தனை அடிமை



ஒரு கோட் சூட் போட்ட டிப் டாப் டீசன்ட் ஆசாமி ரோட்டில் ஒரு இடத்தில காரை நிறுத்தி விட்டு ஒரு பெட்டி கடையில் சிகரெட் வாங்கி அடிக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள் .

அவரை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்?

இதில் பார்க்க என்ன இருக்கு .. நல்லா ஸ்டைலா கம்பீரமா சிகரெட் ஊதரார் அவ்ளோ தான் எனலாம்.
சரி இப்போ அதே ஆசாமி பெட்டி கடையில் ஒரு கடலை மிட்டாய் வாங்கி பகிரங்கமாய் ரோட்டில் சாப்பிட்டு கொண்டு வருகிறார் என்று வைத்து கொள்ளுவோம்.

அவரை ஒரு காமெடி பீஸ் போல ..அரை கிறுக்கன் போல பார்ப்போமா இல்லையா.. இப்போ சிந்தித்து பாருங்கள் கடலை மிட்டாய் சிகரெட்டை விட எந்த விதத்தில் தாழ்ந்தது? டாக்டர்கள் தினம் சாப்பிட சொல்லி சிபாரிசு செய்வது கடலை மிட்டாய். அதே டாக்டர் நிறுத்த சொல்லி அட்வைஸ் பண்ணுவது சிகரெட்.

அப்படி இருக்கையில் சிகரெட் அடிப்பவனை பந்தாவாகவும் கடலை மிட்டாய் சாப்பிடுபவனை தாழ்ந்தவனாக பார்க்கும் அந்த சிந்தனை இருக்கிறதே... அது உங்கள் சிந்தனை அல்ல உங்களிடம் திட்டமிட்டு பெரும் மல்டி நேஷனல் கம்பெனி பெரும் முதலாளிகளால் செலுத்த பட்ட ஒரு சிந்தனை.

முதல் முதலில் நம் நாட்டிற்கு சிகரெட் வந்த போது அதன் விற்பனை சுத்த சைபர்.

'இது என்ன ஐட்டம் பா இது ஒரே நாற்றம் வீடெல்லாம் சாம்பல்.. இதை மனுஷன் அடிப்பானா' என்பது தான் இந்தியர்களின் சிகரெட் பற்றிய முதல் சிந்தனை.
அனால் அப்படி பட்டவர்களை சிகரெட் மோகத்திற்கு தள்ள அதன் கம்பெனி முதலாளிகள் பயன் படுத்திய வழிமுறை மிகவும் உளவியல் ரீதியானது. அது என்ன வழிமுறை தெரியுமா??

மிஸ்டர் A வை நீங்கள் பயமுறுத்த நினைக்கிறீர்கள் அவரை விட நீங்கள் உயர்ந்தவர் என காட்ட நினைக்கிறீர்கள் . ஆனால் அந்த மிஸ்டர் A என்கிற ஆசாமி உங்களை ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை.. உங்களை பார்த்து பயபடுவதாவது அதுக்கு வாய்ப்பே இல்லை .

ஆனால் மிஸ்டர் A என்பவருக்கு மிஸ்டர் B என்றால் மிகுந்த பயம்.

அவரை கண்டால் மிரளுவார் என்று வைத்து கொள்ளுங்களேன் அப்படி இருக்கும் போது நீங்கள் ஒரு முறை மிஸ்டர் B யை தூக்கி போட்டு அடித்து பந்தாடி விடுகிறீர்கள் இப்போது என்னாகும் .?

தான் இவ்ளோ பெரிய ஆளாக மதித்த B யையே இவர் போட்டு அடித்து விட்டார் எனில் இவர் சாதாரண ஆள் இல்லை என்கிற எண்ணம் மிஸ்டர் A மனதில் தானாகவே பதிந்து விடும்.

கிட்ட தட்ட இதே உளவியலை தான் சிகரெட் ஓனர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் அதை எப்படி செய்தார்கள் தெரியுமா?

நாம் பெரிதாக மதிக்கும் நாம் தலைவனாக ...உயிராக கொண்டாடும் சினிமா நடிகனை காசு கொடுத்து பிடித்து முதலில் சிகரெட் அடிக்க வைத்தார்கள். சிகரெட் என்பது சாதாரணமானவர்கள் அடிப்பது அல்ல அது பெரிய பெரிய ராயல் மனிதர்கள் பயன் படுத்தும் பொருள். சிகரெட் அடிப்பது ஆண்மையின் அடையாளம் என்று விளம்பர படுத்தினார்கள்.
நம்ம நடிகனே அடிக்கிறான் என்றால் அது எப்பேர் பட்ட பொருளாய் இருக்கும் என்ற மாயை வலையில் மக்கள் விழுந்தனர்.

விளைவு...
அழுக்கு சட்டை கிழிந்த லுங்கியுடன் இருந்தாலும் சிகரெட் வாங்கி அடிக்கும் அந்த நேரத்தில் தன்னை ராயலாக உணர தொடங்கினான் குடிமகன்.
இன்று வரை அவன் புத்தியில் அந்த சிந்தனை மாறவில்லை.

எவனோ ஒருவன் 'ப்ராடக்ட் ' ஐ விற்பதற்காக தனக்குள் இந்த சிந்தனையை செலுத்தி இருப்பதை அவன் கடைசி வரை உணறுவதில்லை.

கோக் பெப்சி குடிப்பதை டீசன்ட் இன் அடையாளமாக பார்ப்பது இளநீர் என்பதை' லோக்கல் ' என்ற முத்திரையுடன் பார்ப்பது என்கிற சிந்தனை இருக்கிறதே ... அதுவும் உங்கள் சிந்தனையே இல்லை..

ஒரு பாட்டில் நிறைய கோக் தயாரிக்க ஆகும் செலவு வெறும் 20 பைசா தான் என்கிறார்கள். மீதி இருப்பது பூரா அதன் விளம்பர செலவுதான் என்கிறார்கள்.
நினைத்து பாருங்கள் ஒரு 20 பைசா பொருள் அது எந்த தரத்தில் இருக்கும் என்று.

அப்படி இருக்க இவ்வளவு  பொருளுக்கு நட்சத்திர அந்தஸ்து வந்தது எப்படி?
சில முக பசைகள் 7 வாரங்களில் சிகப்பாக்குவது உண்மை என்றால் 7 வாரங்களில் தமிழ் நாட்டில் ஒரு கருப்பனும் இருக்க கூடாதே...

பசை தடவி நிரந்தர வெள்ளை ஆனவன் என்று ஒருத்தன் கூட நாட்டில் இல்லையே அதெப்படி?
ஆமாம் அதிருக்கட்டும் முதலில் சிகப்பு நிறம் என்பது அழகு என்றும் கருப்பு நிறத்தை அசிங்கம் என்றும் நினைக்க படும் சிந்தனை இருக்கிறதே அது நம்மிடையே எப்போ எப்படி யாரால் வந்தது?

நமது பழங்கால வரலாற்றில் எங்கேயும் நிற வேறுபாடு குறித்து கருப்பை குறைந்து மதிப்பிடும் குறிப்பு என்று எதுமே இல்லையே..

கண்னகி தொடங்கி கிருஷ்ணன் வரை கருப்பு நிறத்தை கொடுத்து மகிழ்ந்த நாம் சிகப்பை அழகு என நம்ப தொடங்கியது அழகு பசை விற்கும் அந்த முதலாளிகள் வந்த பின் தான்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் நம் நாட்டில் இருந்து எக்க சக்க உலக அழகி தேர்ந்தெடுக்க பட்டார்களே இப்போது ஒருவர் கூட தேர்ந்தெடுக்க படுவது இல்லையே அது ஏன் தெரியுமா ?

அந்த போட்டிகளை நடத்துவதே face creem ஒனர்கள் தான் உலக அழகிகளை தங்கள் ப்ராடெக்ட்க்கு விளம்பர மாடலாக குத்தகை எடுத்து இந்தியாவில் தாங்கள் கால் ஊன்று வது தான் பின்னணி நோக்கம் .இங்கே போதிய அளவு பிசினஸ் பிடித்த விட்ட பின் தனது பொருள் விற்கப்படாத வேறு நாட்டில் சென்று அங்கு உலக அழகி களை தேர்ந்தெடுக்க தொடங்கி விட்டார்கள்.

Lux என்பது நடிகைகளுக்கான சோப்பு என சொல்ல பட்ட போது அதை போட்டு குளிக்கும் பெண் தன்னை நடிகையாக பார்க்க தொடங்கினாள் சிகர்க்காயை கேவலமாக பார்க்க தொடங்கினாள்.

இந்த பெரும் முதலாளி எனும் முதலை வர்க்கம் நமக்குள் செலுத்திய எண்ணங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.

பிரிட்டிஷ் காரனிடம் நாம் விடுதலை வாங்கி விட்டதாக நம்பி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இன்னும் நாம் அவனுடைய சிந்தனைக்கு அடிமையாக தான் இருக்கிறோம் என்பதை உணர்ந்தது உண்டா?

நமக்கு கல்வி முறையை கொடுத்த ஜான் மெக்லே அவர்களது நாடாளு மன்றத்தில் பேசிய உரை நீங்கள் கேள்வி பட்டிருக்கலாம் " இந்தியர்களை எப்படி அடிமை படுத்துவது " என்ற கேள்விக்கு மெகளே பதில் அளிக்கையில் " இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தனது நாட்டின் கலாச்சாரத்தில் ..பண்பாட்டில் பெருமை கொண்டவனாக இருக்கிறான் . அவனை தங்களது கலாச்சாரம் தாழ்ந்தது என்று எண்ணவைக்காமல்... அவனை ஆங்கிலம் என்பது உயர்ந்த மொழி அவன் பேசுவது தாழ்ந்த மொழி ..என்ற கருத்தை அவனுக்குள் வெரூன்றாமல் இந்தியனை அடிமை படுத்துவது இயலாத காரியம்" என்றான்.
விளைவு ...

ஆங்கிலம் பேசுபவனை அறிவாளி என நம்ப தொடங்கினோம்.

தமிழ் பேசுபவன் தாழ்ந்தவனாக ..முட்டாளாக .. பார்க்கப்பட்டான். இன்னமும் ஆங்கிலம் பேசுவதை 'டீசன்ட்' என்ற முதிரையோடு பார்க்கிறது சமூகம்..
ஆங்கிலத்தில் பீட்டர் விடுபவனை இன்னுமும் பெண்கள் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கிறார்கள்.
உண்மையில் ஆங்கில மொழியில் உயர்வாக எண்ணுவதற்கு ஏதாவது இருக்கிறதா?

நீங்கள் தவறு செய்தால் சாதாரணமாக யாரிடமும் சாரி என்று சொல்லி விட முடியும். ஆனால் "என்னை மன்னிசிடுங்க " என்று உங்களால் உடனடியாக சொல்லி விட முடியாது.

ஒரு கெட்ட வார்த்தையை 'பாஸ்டர்ட்' என நாம் நாலு பேர் முன்னாடி சொல்லி விட முடியும் ஆனால் அதே பொருள் கொண்ட தமிழ் வார்த்தையை அப்படி சொல்லி விட முடியாது..
காரணம் ஆங்கிலம் மிக மேலோட்டமானது தமிழ் மிக உயிரோட்டமானது.

'காக்கைகும் தன் குஞ்சு....'என்ற ரீதியில் எல்லாம் இல்லாமல் உங்களை ஒரு நடுநிலையாக வைத்து இந்த கையில் ஆங்கிலம் அந்த கையில் தமிழை வைத்து கொண்டு ... இரண்டையும் எடை போட்டு பார்க்க சொன்னால்...

இதில் உருவாகி உள்ள கலை இலக்கியம் அதில் உருவாகி உள்ள கலை இலக்கியம்..
இதில் உள்ள பெருமைகள் அதில் உள்ள பெருமைகள்....

இந்த மொழிகாக உயிரை விட்டவர்கள் அந்த மொழிக்காக உயிரை விட்டவர்கள்.
இந்த மொழி தோன்றி எத்தனை நாள் அந்த மொழி தோன்றி எத்தனை நாள் என்று எல்லாம் ஆய்ந்து பார்த்தால் ஆங்கிலம் தமிழுக்கு ஒப்புக்கு கூட நிகர் ஆகாது என்பதை புரிந்து கொள்ளலாம்.
அப்படி இருக்க ஏன் அதை நாம் அவ்வளவு கொண்டாடுகிறோம்?
நாம் கொண்டாடவில்லை ... கொண்டாட வைக்க பட்டுள்ளோம்.

அடுத்ததாக,
இந்த வண்டியில் பூட்டும் மாடு இருக்கிறதே அதை முதல் முதலில் நுகத்தடியில் தலை வைத்து கட்டுவதற்கு பழக கஷ்ட பட வேண்டும்.
அதுவே தினம் வண்டி ஓட்டும் மாட்டை கவனித்தது உண்டா... அது தளை களை கிட்டே கொண்டு போனாலே தன் தலையை தானே குனிந்து அதில் மாட்டும்..

அப்படி நம்மை 'சிந்தனை அடிமை' ஆக்கி சின்னா பின்ன படுத்திய கும்பல் ஒரு பக்கம் என்றால் நாமாகவே சென்று தலையை கொடுத்து அடிமையாகி கொண்டிருப்பது மறுபக்கம்...

எப்படி என்று சொல்கிறேன்..
இந்த பூமி பந்திலேயே மிக சிறந்த கலாச்சாரத்திற்கும் மிக சிறந்த பண்பாட்டிற்கு சொந்தகாரனான நாம் வெளிநாட்டு கலாச்சாரத்தை பெருமை என நினைத்து மாறி வருகிறோம்.

ஒரு ஹோட்டலில் எல்லோருடைய வாய்க்குள்ளேயும் சென்று வரும் ஸ்பூனில் சாப்பிடுவதை ,வெறும் நம் வாய்க்குள் மட்டும் சென்று வரும் நம் கையை கொண்டு சாப்பிடுவதை விட சிறந்ததாக எண்ணுகிறோம்.

தன் தோல் கருக்க வெள்ளைக்காரன் மணிக்கணக்கில் சூரிய ஒளியில் கிடக்க நாம் நம் தோல் சிவக்க ஆயிரம் பசை பூசுகிறோம்..

ஒரு நல்ல நாள் என்றால் அதில் விளக்கை அணைப்பது நமது கலாச்சாரமல்ல அது அபசகுணம். நல்ல நாளில் விளக்கை ஏற்றுவது தான் நம் பழக்கம்.
ஆனால் பிறந்த நாளில் மெழுகை ஊதி
அணைத்து நம்மை 'வெள்ளைக்கார துறை 'யாக உணர்கிறோம்.

இந்த அன்னையர் தினம் என்ற ஒன்று வருகிறதே... அடடா அன்னையை நினைத்து அன்னை செய்த நற்செயலுக்கு நன்றி சொல்லி ஆஹா எவ்ளோ சிறந்த ஒரு நாள் அது..

ஒன்று சொல்லுகிறேன்..
அன்னையர் தினம் கொண்டாடுவதை போல கேவலம் வேறு எதுவும் இல்லை.
அம்மாவை நினைக்க ஒரு நாள் இருந்துட்டு போகட்டுமே அதில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்.

தவறு மிக பெரிய தவறு.
தாயக்கு நன்றி சொல்லும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் இல்லை நாம் அதை விட மிக உயர்ந்த கலாச்சாரத்தை கொண்டவர்கள்.

ஒரு திருநாளில் புது துணி வாங்கி கொடுக்கும் அன்னையை பார்த்து யாரும் ரொம்ப நன்றி அம்மா என்று பாரதத்தில் சொல்லுவதில்லை .
ஆனால் இந்த தலைமுறை அதை செய்கிறது.
நமது கை இருக்கிறதே அது காலம் தோறும் நமக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது நமக்காக எவ்வளவு வேலை செய்கிறது .. எனவே நம் கை யை பார்த்து கை கு நன்றி சொல்ல சொன்னால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்.

" இதென்ன பைத்தியக்கார தனம் அது நம்முடைய கை தானே அதுக்கு நன்றி சொல்வது முட்டாள் தனம் அல்லவா" என்று நினைப்பீர்கள் அல்லவா... காரணம் நம் கையை நாம் நமது உடலில் இருந்து வேறாக பார்ப்பது இல்லை.
அப்படிதான் நம் தாயை நாம் நம்மிலிருந்து வேறாக பார்ப்பது இல்லை.
தான் வேறு அன்னை வேறு என்று நினைக்காத உன்னத கலாச்சாரத்தில் இருக்கும் இவன்.. வயது வந்த உடன் தாயை பிரிந்து விடும்... வருடத்திற்கு ஒரு முறை தாயை நினைவு கூறும் கீழான கலாச்சாரத்தை பார்த்து மயங்குகிறான் ...பாராட்டுகிறான் பின்பற்றுகிறான்.....

நேற்று.... நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கால போக்கில் காற்றில் விட்டு விட்டோம்...
இன்று அடுத்த அடி நமது பாரம்பரியத்தில் அடிக்க பார்க்கிறார்கள்

நம் தமிழ் மக்கள் சிசு வதை கூட செய்தது உண்டு ஆனால் பசு வதை செய்தது இல்லை.
இந்த விஷயத்தில் கார்ப்பரேட் கெட்டவர்கள் இந்த சிந்தனை திணிப்பில் இன்று வரை வெற்றி பெற வில்லை என்பது ஆறுதல் அளிக்கும் உண்மை என்றாலும்...

நாம் ஆயிரம் விஷயத்தில் இன்னும் சிந்தனை அடிமையாக இருக்கிறோம் என்பது தான் கசப்பான உண்மை..

உலக அதிசயம் என்றால் என்ன?





உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின்
அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது
என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை
தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு
இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7
ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக
அதிசயம்.

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத
பைரவர் கோவிலில். குழந்தை தாயின்
வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை
இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில்.
இவ்ளவு விதமான Positions ல இருக்கும்
என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
கல்லில் சிற்ப்பங்களாக வடித்து
வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது
உலக அதிசயம்.அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட.
இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க
முடியவில்லை.

இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி
குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை
போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப
எவ்ளவு துல்லியமாக அளந்து
ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று
பாருங்கள்.

சில கோவில்களில் தினமுமே
சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை
போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள
வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3
வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது
மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில்
உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள்
பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம்
ஆண்டுகள். இது உலக அதிசயம்.

மதுரை
மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய
கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில்
உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால்.
அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு
பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு
முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில்
ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம்,
அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும்
அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது.
அது உலக அதிசயம்.

யாழி என்கிற மிருகத்தின்
சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும்.
டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து
அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில
பழம்கால கோவில்களில் உள்ள யாழி
சிலையின் வாயில் ஒரு உருண்டை
இருக்கும். அந்த உருண்டையை நாம்
உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள்
ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி
வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ
முடியாது. அது உலக அதிசயம்.

இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய
மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி
விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு
நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை
உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7
ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த
வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில்
உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால்
உருவ முடியாது. இந்த வித்தையை இன்று
எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.
மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை.
அழகிய கலை வேலைபாடுகளோடு
உருவாக்குவது. இதை எந்த உலக
வல்லரசாலும் செய்ய முடியாதது.

அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை
கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று
சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள
கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம்
இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு
தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால்
கிணற்றில் குளிக்கலாம். ஆனால்
மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது
தெரியாது.அன்றைய ராணிகளுக்காகவே
கட்டப்பட்ட கிணறு அது.

அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில்
சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால்
வெளியே வெயில் அடித்தால் உள்ளே
குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே
கதகதப்பாக இருக்கும்.
அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள்
பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம்
உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும்
படைவீரர்களும் பதுங்கும் வகையில்
கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.
மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.
தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.

முன்னோா்களின் திறமையையும்&
கலைநயத்தையும் போற்றி தலை
வணங்குவோம்
இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம்
கொள்வோம்.

Monday, February 6, 2017

எது வெற்றி ?





4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

For Content Authors/Article Writers:

Content Authors or Article Writers, who want to add their entries to this blog can email their entries to ebytesonline@gmail.com OR by posting their articles via comments area.
The entries should be informative and interesting and should be related to the specific category. We will add your email or your website URL (if you want to get them listed along with the article).

Disclaimer:

The views and opinions expressed in the media, articles or comments on this blog are those of the writers or authors and do not necessarily reflect the views and opinions held by eBytesOnline. eBytesOnline should not be held accountable for any of the information you may find on this web blog.
eBytesOnline does not warrant the accuracy, timeliness or completeness of the information contained on our web blog.
If you have a particular complaint about something you've found on this web site OR If you read something offensive or that you strongly disagree with, please post a comment to the post or notify us to ebytesonline@gmail.com; we will remove offensive (or otherwise inappropriate) content.

http://ebytesonline.blogspot.com